தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தடுப்பில் பைக் மோதி  மோதி ஒருவர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சாலை தடுப்பில் பைக் மோதியதில் ஜேம்ஸ்(45) சம்பவ

Updated On :25 டிசம்பர் 2014, 12:32 pm

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சாலை தடுப்பில் பைக் மோதியதில் ஜேம்ஸ்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் என்கிற பேரரசு (வயது 46). இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு ஜேம்ஸ் எளாவூரில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது சின்ன ஓபுளாபுரம் பகுதியில் வந்த போது சாலை தடுப்பு சுவரில் எதிர்பாராத வகையில் அவரது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜேம்ஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.